ஆம்பூர் அருகே கைலாசகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியில் தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை வகித்தார்.
பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சுந்தரம் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் கிராமத்தின் பல்வேறு தெருக்கள் வழியாகச் சென்றது.
இதேபோல், ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் தலைமை ஆசிரியர் செ.ரவிச்சந்திரன் தலைமையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.