வேலூர்

தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த லாரி

DIN

திருப்பத்தூரில் தடுப்புச் சுவரில் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோட்டிலிருந்து ஹைதராபாதுக்கு பேப்பர் ரோல் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. அரூரைச் சேர்ந்த மாதேஷ் (47) லாரியை ஓட்டினார். உதவியாளர் தங்கராஜ் (35) உடன் இருந்தார். திருப்பத்தூர்-வாணியம்பாடி நெடுஞ்சாலையில் வந்தபோது, சாலையின் தடுப்புச் சுவரில் மோதி லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநரும், உதவியாளரும் காயமின்றி தப்பினர். 
இதனால், அப்பகுதியில் இரவு 7 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்புச் சுவரின் உயரத்தை அதிகரித்து, பிரதிபலிப்பு வில்லைகளை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

SCROLL FOR NEXT