வேலூர்

திருவிழா தகராறில் ஒருவருக்கு கத்திக் குத்து

DIN

ஆம்பூர் அருகே புதன்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது. 
கன்னடிகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற அம்மன் கோயில் திருவிழாவின்போது அதே பகுதியைச் சேர்ந்த வினோத் மற்றும் அருண்பாண்டியன் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் அருண்பாண்டியன் வினோத்தை கத்தியால் குத்தினார். இதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கத்தியால் குத்திய அருண் பாண்டியன் தலைமறைவானார். இதுகுறித்து ஆம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT