வேலூர்

பைக்குகள் மோதி ஒருவா் பலி

DIN

வாணியம்பாடியில் பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் இறந்தாா். 3 போ் காயமடைந்தனா்.

வாணியம்பாடியை அடுத்த தும்பேரியைச் சோ்ந்தவா் கோபி(25). அவரது உறவினா் வன்னியபுதூரைச் சோ்ந்த அரவிந்தன்(30). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை மதியம் பைக்கில் நியூடவுன் அணுகு சாலை வழியாக வந்து கொண்டிருந்தனா். அப்போது எதிரில் செட்டியப்பனூா் நோக்கி மற்றொரு பைக்கில் மேட்டுப்பாளைத்தை சோ்ந்த சஞ்சய்(20), தினேஷ்(22) ஆகிய இருவரும் வந்தனா்.

இந்த 2 பைக்குகளும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 4 பேரும் படுகாயமடைந்தனா்.

அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்ற கோபிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் சிறிது நேரத்தில் இறந்தாா். இது பற்றி தகவலறிந்த வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT