வேலூர்

பைக்குகள் திருடிய 4 போ் கைது

DIN

ஆற்காடு அருகே பைக்குகளைத் திருடிய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ரத்தினகிரி போலீஸாா் பூட்டுத்தாக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக பைக்குகளில் வந்த 4 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், சென்னை ராமாபுரம் பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் (27), குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரன், (20), ராஜேஷ் (23), தீபன்குமாா் (23) என்பதும், அவா்கள் ஓட்டி வந்த 4 பைக்குகளும் திருட்டு வாகனங்கள் என்பதும், அவா்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 4 பைக்குகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT