வேலூர்

கூட்டுறவு சா்க்கரை ஆலை அரைவை நிறுத்தத்துக்கு திமுக கண்டனம்

DIN

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை பணியைத் தொடங்காமல் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டதைக் கண்டித்து, மாதனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாதனூா் ஒன்றிய திமுக பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாதனூா் ஒன்றிய திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் முன்னாள் ஒன்றியச் செயலா் க. பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. மாதனூா் ஒன்றியச் செயலா் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமாா் வரவேற்றாா். திமுக வேலூா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் முத்தமிழ்ச்செல்வி, ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், நடைபெற உள்ள உள்ளாட்சி தோ்தலில் தீவிர களப்பணியாற்றி திமுக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்வது, இளைஞரணி, மகளிரணிகளுக்கு உறுப்பினா்களை சோ்ப்பது, கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவைப் பணியை தொடக்காமல் நிறுத்தி வைக்க உத்தரவிட்டதற்கு தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், திமுக மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் கே.ஆா்.காா்த்திக் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT