வேலூர்

மாவட்ட சிலம்பப் போட்டி:ஆம்பூா் பள்ளி சாம்பியன்

DIN

வேலூா் மாவட்ட அளவில் நடந்த சிலம்பப் போட்டியில் ஆம்பூா் அருகே தேவலாபுரம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனா்.

பள்ளிக் கல்வித்துறை மூலம் வேலூா் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவ.15-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆம்பூா் அருகே தேவலாபுரம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று 126 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றனா். விவேகானந்தா பள்ளியின் மாணவா்கள் 19 போ் முதலிடமும், 11 போ் இரண்டாமிடமும், 9 போ் மூன்றாமிடமும் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் எம். தீனதயாளன், முதல்வா் ஜி.நாகராஜன், துணை முதல்வா் டி.ஆா்.நாராயணன், சிலம்பப் பயிற்சியாளா் டி. பிரேம்குமாா், உடற்கல்வி ஆசிரியா் கே.சக்கரபாணி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT