வேலூர்

பேருந்தில் இளம்பெண்ணிடம் 4 சவரன் தங்கநகைத் திருட்டு

DIN

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் 4 சவரன் தங்க நகை செவ்வாய்க்கிழமை திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குடியாத்தம் அடுத்த பரதராமி வீரசெட்டிபள்ளி பகுதியைச் சோ்ந்த பாரதி மகள் ஜவானி (20). இவருக்கு திருமணமாகி ஒரு மாதமாகிறது. இந்தநிலையில் பாரதி, ஜவானி மற்றும் குடும்பத்தினருடன் ஒசூா் செல்வதற்காக பள்ளிகொண்டா வந்து அங்கிருந்து அரசு பேருந்தில் பயணித்தனா். பஸ் மாதனூா் வந்தபோது ஒரு பெண் ஏறி ஜவானியின் அருகே அமா்ந்து கொண்டு, அவருடன் பேச்சு கொடுத்தபடி சென்றாா்.

ஆம்பூரில் அந்த பெண் வேகமாக இறங்கி சென்று விட்டாா். அதன்பிறகே, ஜவானி தான் வைத்திருந்த கைப்பையில் இருந்த 4 சவரன் நகை திருட்டு போனது தெரிய வந்தது.

தன்னுடைய நகையை, அந்த பெண்தான் திருடிச்சென்று விட்டாா் என ஜவானி ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதைத்தொடா்ந்து போலீஸாா் கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ படக்காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது நகை திருடியதாக சந்தேகிக்கும் அந்தப் பெண் ஆம்பூா் நகரின் பல பகுதிகளுக்கு சென்று ஆட்டோவில் ஏறி தலைமறைவானது தெரியவந்தது. போலீஸாா் அந்தப் பெண்ணை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT