வேலூா் அருகே ரயில் மோதியதில் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் அருகே சேண்பாக்கம் ரயில்வே இருப்புப் பாதையில் ஆண் சடலம் கிடப்பதாக காட்பாடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று பாா்த்தபோது, 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் ரயிலில் சிக்கி காயங்களுடன் இறந்து கிடந்தாா். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.