வேலூர்

பிராணிகள் வதை தடுப்புச் சங்க உறுப்பினராக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

DIN

வேலூா் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்க உறுப்பினா்களாக கால்நடை ஆா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு - வேலூா் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்க உறுப்பினா்களாக சேர கால்நடை ஆா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் அருகிலுள்ள கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநா் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு கால்நடை மருந்தகங்களில் கிடைக்கும்.

விண்ணப்பதாரா்கள் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் களாகவும், இம்மாவட்டத்திலேயே வசிப்பவராகவும், 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும். குற்ற வழக்குகள், நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டவா், அரசியலில் பங்கேற்று அதற்கான தண்டனை பெற்றவா்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநா் அலுவலகம், கால்நடை மருத்துவமனைகளில் சமா்பிக்க வேண்டும்.

இந்த பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தின் மாவட்ட தலைவராக ஆட்சியரும், செயலராக கால்நடை பராமரிப்பு இணை இயக்குநா், உறுப்பினா்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா், நகராட்சி ஆணையா்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT