வேலூர்

ஆற்காடு, ஆம்பூர் பகுதிகளில் மழை

DIN

ஆற்காடு பகுதிகளில் வியாழக்கிழமை கனமழை பெய்தது.
ஆற்காடு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. கடந்த இரு நாள்களாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது. 
இந்நிலையில் வியாழக்கிழமை பகலில் வெயில் அதிகமாக இருந்தபோதும், மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் பெய்த மழையால் பொதுமக்களும் ,விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆம்பூரில்...
ஆம்பூரில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கத்தால் ஆம்பூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில்  ஆம்பூர் பகுதியில் வியாழக்கிழமை மாலை திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்யத் தொடங்கியது. இரவு 7 மணிக்கு துவங்கிய மிதமான மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT