வேலூர்

பி.ஹெச்.பாண்டியனுக்கு சிகிச்சை: துணை முதல்வர் நலம் விசாரிப்பு

DIN


உடல்நலக்குறைவால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.ஹெச்.பாண்டியனை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.ஹெச்.பாண்டியனுக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர், கடந்த 10-ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் வந்தார். 
அவர், பி.ஹெச்.பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், பி.ஹெச்.பாண்டியனின் மகள் தேவமணி, அவரது கணவரும், சிஎம்சி மருத்துவருமான தீபக்செல்வராஜ் ஆகியோரையும் சந்தித்து நலம் விசாரித்தார்.  இந்த சந்திப்பின்போது மாநிலங்களவை உறுப்பினர் முகமதுஜான், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.ரவி (அரக்கோணம்) , சம்பத் (சோளிங்கர்), முன்னாள் அமைச்சர் விஜய், மாவட்ட அதிமுக பொருளாளர் எம்.மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT