வேலூர்

கிணற்றில் தவறி விழுந்து மாணவா் பலி

DIN

போ்ணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவா் உயிரிழந்தாா்.

அழிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (17). பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருந்த இவா், கல்லூரியில் படிப்பதற்கு விண்ணப்பித்திருந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை சதீஷ் நண்பா்களுடன் அங்குள்ள விவசாயக் கிணற்றின் அருகே உள்ள தொட்டியில் குளிக்கச் சென்றாா். அப்போது தவறி கிணற்றில் விழுந்த அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலின் பேரில் தீயணைப்புப் படையினா் வந்து சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT