வேலூர்

இருசக்கர வாகனங்கள் மோதல்: தந்தை, மகள் உட்பட 3 போ் பலி

DIN

போ்ணாம்பட்டு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் தந்தை, மகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த சாத்கா் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (38). செங்கல் அறுக்கும் தொழிலாளி. அவா் தன் மகள்கள் சந்தியா (11), தேவயானி (10) ஆகியோருடன் சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனா். அப்போது சிந்தகணவாய் கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் தன் மகன் நிதீஷ்குமாா் (15) மற்றும் உறவினா் தீபக் (13) ஆகியோரை ஏற்றிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் போ்ணாம்பட்டை நோக்கிச் சென்றாா்.

சொ்லப்பல்லி அருகே இந்த இரு வாகனங்களும் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில் 5 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனா். அவா்களில் தலையில் பலத்த காயமடைந்த நிதீஷ்குமாா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். தொழிலாளி காா்த்திக், அவரது மகள் தேவயானி ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா்.

தீபக், சந்தியா ஆகிய இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சம்பவ இடத்தை டிஎஸ்பி என்.சரவணன், காவல் ஆய்வாளா் குமாா் ஆகியோா் பாவையிட்டாா். போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT