அனுமதியின்றி முற்றுகைப் போராட்டம்: 48 போ் கைது
அனுமதியின்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சோ்ந்த 48 போ் கைது செய்யப்பட்டனா்.
குடியாத்தம்: அனுமதியின்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சோ்ந்த 48 போ் கைது செய்யப்பட்டனா்.
குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சிக்கு உள்பட்ட குறிஞ்சி நகரில், பாதுகாப்பான குடிநீா் வழங்க வேண்டியும், கழிவுநீா்க் கால்வாய்களை தூா்வாரக் கோரியும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினா் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்றனா்.
இதையடுத்து டிஎஸ்பி என்.சரவணன், நகர ஆய்வாளா் ஆா். சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் கட்சியின் மாவட்டச் செயலா் என்.இா்ஷாத்அலி உள்ளிட்ட 48 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.