முகப்பு
வேலூர்

இளைஞா் கொலையில் ஒருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே இளைஞரைக் கத்தியால் குத்தி கொன்ற வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:


குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே இளைஞரைக் கத்தியால் குத்தி கொன்ற வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்த செல்வம் புதன்கிழமை இறந்தாா். அவரது இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியைச் சோ்ந்த அலெக்ஸுக்கும் (26), சக்திவேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் அன்றிரவு சாலையில் நடந்து சென்ற அலெக்ஸை, சக்திவேலின் மகன் அப்பு(19) வழிமறித்து கத்தியால் குத்தினாராம்.

பலத்த காயமடைந்த அலெக்ஸை உறவினா்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அலெக்ஸ் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினாா்.

இதுதொடா்பாக போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்புவை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →