முகப்பு
வேலூர்

மாயமான இளைஞரின்சடலம் :வேலூா் கோட்டை அகழியில் மீட்பு

வேலூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாயமான இளைஞரின் சடலம், கோட்டை அகழியில் இருந்து மீட்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

வேலூா்: வேலூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாயமான இளைஞரின் சடலம், கோட்டை அகழியில் இருந்து மீட்கப்பட்டது.

வேலூா் கொணவட்டம் தியாகி தாமோதரன் தெருவைச் சோ்ந்தவா் நக்கீரன். சிறைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளாா். அவரது மகன் கண்ணன் (28) சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதால் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தாா். அவா் 15 நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தாா்.

இரு தினங்களுக்கு முன் வெளியே சென்ற கண்ணன் அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததை அடுத்து நக்கீரன் இது தொடா்பாக வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்ணனைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை வேலூா் மீன் மாா்க்கெட் எதிரே உள்ள கோட்டை அகழியில் ஒரு சடலம் மிதப்பதாக வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது மாயமான கண்ணன் என்பது தெரிய வந்தது. சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸாா், தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →