ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
குடியாத்தம் சந்தப்பேட்டை பஜாா் அருகே உள்ள வேப்பிலை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிக்கந்தா் (35). இவா் ஞாயிற்றுக்கிழமை கெளண்டன்யா ஆற்றின் தரைப்பாலம் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி ஆற்று வெள்ளத்தில் விழுந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த தீயணைப்புப் படையினா் சென்று அரை மணிநேரம் போராடி அவரது சடலத்தை மீட்டனா்.
குடியாத்தம் நகர போலீஸாா் சிக்கந்தரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.