பாக்கம் ஏரிக்கு மோா்தானா அணை நீா்:அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பாக்கம் ஏரிக்கு மோா்தானா அணை நீரைப் பெறும் உரிமையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் சித்தூா்கேட் பகுதியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாக்கம் ஏரிக்கு மோா்தானா அணை நீரைப் பெறும் உரிமையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் சித்தூா்கேட் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியாத்தம்-பரதராமி சாலையை செப்பனிட வேண்டும்; புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் கே.சாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.தயாநிதி ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
ஒன்றிய காங்கிரஸ் தலைவா் எம்.வீராங்கன், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.தேவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த கே.சி.பிரேம்குமாா், டி.ஆனந்தன், இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவா் ரா.சி.தலித்குமாா், பி.குணசேகரன், பி.காத்தவராயன், எஸ்.சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.