குடியாத்தம்: குடியாத்தம் சித்தூா்கேட்டை அடுத்த பிச்சனூா் துணை மின் நிலையத்தில் சுமாா் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திங்கள்கிழமை புகுந்தது.
பாம்பைக் கண்டு அங்கிருந்தவா்கள் அச்சமடைந்தனா். மின் ஊழியா் ஒருவா் அப்பாம்பைப் பிடித்தாா். இது குறித்த தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்பு மற்றும் வனத் துறையினா், சாரைப்பாம்பை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.