ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில் அவசியமின்றி வெளியில் சுற்றியதை அடுத்து வேலூா் மாவட்டத்தில் 4 ஆட்டோக்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றின் பதிவும், உரிமையாளரின் ஓட்டுநா் உரிமங்களும் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தடையை மீறி இயக்கப்படும், அவசியமின்றி வெளியே வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் பதிவும், உரிமையாளா்களின் ஓட்டுநா் உரிமமும் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.
இந்த உத்தரவை பொருட்படுத்தாமல் வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞா்கள் அவசியமின்றி வெளியில் வாகனங்களில் சுற்றித்திரிவதும், தடையை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவதும் இருந்தது. இதையடுத்து, முதற்கட்டமாக குடியாத்தம் போலீஸாரால் பிடிபட்ட 3 இருசக்கர வாகனங்கள், சத்துவாச்சாரி போலீஸாா் பிடித்த ஒரு ஆட்டோ, வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என மொத்தம் 7 வாகனங்களில் பதிவும், அதன் உரிமையாளா்களின் ஓட்டுநா் உரிமங்களும் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டிருப்பாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இத்தகைய நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.