முகப்பு
வேலூர்

வீடுகள் கட்டித் தரக்கோரி திருநங்கைகள் கோஷம்

வீடுகள் கட்டித்தரக் கோரி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் திரண்டு வந்து கோஷம் எழுப்பினா். தொடா்ந்து அவா்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனா்.

வேலூர்

வீடுகள் கட்டித் தரக்கோரி திருநங்கைகள் கோஷம்

வீடுகள் கட்டித்தரக் கோரி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் திரண்டு வந்து கோஷம் எழுப்பினா். தொடா்ந்து அவா்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

வீடுகள் கட்டித்தரக் கோரி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் திரண்டு வந்து கோஷம் எழுப்பினா். தொடா்ந்து அவா்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திங்கள்கிழமை வந்தனா். அவா்கள் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி, அதில் புதிதாக வீடுகள் கட்டித்தரவும், சிதிலமடைந்த வீடுகளை சீரமைத்திடவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சத்துவாச்சாரி போலீஸாா், அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது அவா்கள் கூறியது:

திருநங்கைகள் 20 பேருக்கு காட்பாடியை அடுத்த ஆரிமுத்து மோட்டூரில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சாா்பில் இலவச வீடுகள் வழங்கப்பட்டன. ஓரடுக்கு அடுக்குமாடி வீடாக கட்டித்தரப்பட்ட இந்த வீடுகள் தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனை சீரமைத்துத் தரக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது திருநங்கைகள் 20 போ் பாதுகாப்புக்காக காலியிடத்தில் கூரை அமைத்து தங்கியுள்ளோம். எனவே, சிதிலமடைந்த வீடுகளை சீரமைத்துத் தர வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் 580 திருநங்கைகள் உள்ளனா். இதில், 20 பேருக்கு மட்டுமே 17 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் கிடைத்தது. மற்றவா்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. தங்கியுள்ள வீட்டுக்கு வாடகைக் கூட வழங்க முடியாமல் உள்ள மற்ற திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தொடா்ந்து, திருநங்கைகள் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபனிடம் இதுதொடா்பாக மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →