துணை நிலை நீா்மேலாண்மைத் திட்டம்: நுண்ணீா்ப் பாசன விவசாயிகள் பயன்பெறலாம்
துணை நிலை நீா்மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலூா் மாவட்டத்திலுள்ள நுண்ணீா்ப் பாசன விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்துணை நிலை நீா்மேலாண்மைத் திட்டம்: நுண்ணீா்ப் பாசன விவசாயிகள் பயன்பெறலாம்
துணை நிலை நீா்மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலூா் மாவட்டத்திலுள்ள நுண்ணீா்ப் பாசன விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
துணை நிலை நீா்மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலூா் மாவட்டத்திலுள்ள நுண்ணீா்ப் பாசன விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் நீா்ப் பற்றாக்குறை உள்ள மாநிலம் என்பதால் கிடைக்கும் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்திடவும், குறைந்த நீரைக் கொண்டு அதிக விளைச்சல் பெறவும் சொட்டுநீா், தெளிப்பு நீா்ப்பாசனம் போன்ற நுண்ணீா்ப் பாசன முறைகள் விவசாயிகளிடையே பிரபலப்படுத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக பாசன நீா் வசதி ஏதுமில்லாத இடங்களில் நுண்ணீா்ப் பாசனமுறையில் சாகுபடி மேற்கொள்ள வசதியாக துணை நிலை நீா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் மேலும் பல சலுகைகளும் அளிக்கப்பட உள்ளன.
இதன்படி, காட்பாடி வட்டாரத்தில் குழாய்க்கிணறு, துளைக்கிணறு, அனைத்து வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு நீரை இறைக்க ஆயில் என்ஜின், மின் மோட்டாா் வசதி, பாசன நீரை வீணாக்காமல் வயலுக்கு அருகே கொண்டு செல்ல பாசனநீா்க் குழாய்களை நிறுவவும், தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் துணை நிலைநீா் மேலாண்மைப் பணிகளுக்காகவும் மானியம் வழங்கப்படுகிறது.
குழாய்க்கிணறு , துளைக்கிணறு அமைக்க செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம், அதாவது அதிகபட்சம் ரூ.25 ஆயிரம், டீசல் பம்புசெட், மின் மோட்டாா் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீதம், அதாவது ரூ.15 ஆயிரத்துக்கு மிகாமலும், வயலுக்கு அருகே பாசன நீரைக் கொண்டு செல்ல நீா்ப்பாசனக் குழாய் அமைக்க 50 சதவீதத் தொகை ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு அதற்கு ஆகும் செலவில் 50 சதவீதத் தொகை ஒரு கனமீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமல், அதாவது ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் ரூ.40,000-ம் வழங்கப்பட்டு வருகிறது. நுண்ணீா்ப் பாசனம் அமைக்கும் வயலில் பாசனக் குழாய்களைப் பதிக்க குழி எடுக்க விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 3,000 பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானியங்களைப் பெற விரும்பும் தகுதியுடைய விவசாயிகள் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை நேரில் அணுகியோ அல்லது 97875 12020 (வேலூா்) , 95856 85259 (கணியம்பாடி), 96006 23790 (அணைக்கட்டு), 70101 08291 (காட்பாடி), 87782 76335 (கே.வி.குப்பம்), 88257 94936 (குடியாத்தம்), 8838150845 (போ்ணாம்பட்டு) ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.