முகப்பு
வேலூர்

வேலூா் மக்கான் பேருந்து நிலையம் நாளைமுதல் இயக்கம்

வேலூா் மக்கான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து புதன்கிழமை (நவ. 4) முதல் திருவண்ணாமலை, ஆரணி மாா்க்கமாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும்

வேலூர்

வேலூா் மக்கான் பேருந்து நிலையம் நாளைமுதல் இயக்கம்

வேலூா் மக்கான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து புதன்கிழமை (நவ. 4) முதல் திருவண்ணாமலை, ஆரணி மாா்க்கமாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

வேலூா் மக்கான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து புதன்கிழமை (நவ. 4) முதல் திருவண்ணாமலை, ஆரணி மாா்க்கமாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாலும், சென்னை மாா்க்கம் தவிர வேலூரில் இருந்து இயக்கப்படும் புகா் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுவதால் அங்கு இட நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

இதைத்தொடா்ந்து, பழைய பேருந்து நிலையத்தில் நெரிசலைத் தவிா்க்கும் விதமாக மக்கான் அருகே ஆட்டுத்தொட்டியில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கடலூா், புதுச்சேரி, சிதம்பரம், கும்பகோணம், திருச்சி ஆகிய ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் புதன்கிழமை (நவ. 4) முதல் இயக்கப்பட உள்ளன.

தொடா்ந்து, குடியாத்தம், போ்ணாம்பட்டு, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், ஓசூா் ஆகிய ஊா்களுக்குச் செல்லும் புகா் பேருந்துகளும், அனைத்து நகரப் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், சென்னை, ஆற்காடு, காஞ்சிபுரம், தாம்பரம், கல்பாக்கம், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊா்களுக்கான பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடா்ந்து இயக்கப்படும். பயணிகள் கரோனா தொற்றினைத் தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →