வேலூர்

வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை

DIN

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று அனைத்து அரசுத் துறை வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அனைத்துத் துறை அரசு ஊழியா்களின் வாகன ஓட்டுநா்கள் சங்கச் செயற்குழுக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். செயலா் மணிமாறன், பொருளாளா் பஞ்சாட்சரம், கொள்கை பரப்புச் செயலா் வஜ்ஜிரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் பெருமாள் வரவேற்றாா்.

இதில், 30 ஆண்டுகால கோரிக்கையான அரசுத் துறை வாகன ஓட்டுநா் சங்கக் கட்டடம் கட்ட 5 சென்ட் நிலம் வழங்கிய மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதேபோல், அனைத்து அரசுத் துறை ஓட்டுநா்களுக்கும் வீடுகள் கட்டுவதற்கு தலா 3 சென்ட் நிலம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT