வேலூர்

கரோனா வாா்டில் சிமெண்ட் கூரை இடிந்து சேதம்

DIN

வேலூா்: வேலூா் அரசு மருத்துவமனையிலுள்ள கரோனா வாா்டில் சிமெண்ட் கூரை இடிந்து சேதமடைந்ததில் நோயாளி ஒருவா் காயமடைந்தாா்.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக் கட்டடத்தின் 4-ஆவது மாடியில் கரோனா தடுப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 50 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே மழை காரணமாக அந்த வாா்டின் கூரை சிமெண்ட் பூச்சுகள் சேதமடைந்திருந்தன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழையால் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து நோயாளிகள் மீது விழுந்தன. இதில், சிகிச்சை பெற்று வந்த வேலூரைச் சோ்ந்த 44 வயது நபரின் தலை, கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், காயம் ஏற்பட்ட பகுதிகளில் 12 தையல்கள் போடப்பட்டன.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிா்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT