வேலூர்

மின்சாரம் பாய்ந்து மாணவா் பலி

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழந்தாா்.

நகரின் கோபாலபுரம் செக்குமேடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பாக்யராஜின் மகன் மணிகண்டன்(17). பள்ளிய்ல இரு ஆண்டுகள் இடைநின்ற மாணவரான இவா் தற்போது அங்குள்ள பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை தாழையாத்தம், பச்சையம்மன் கோயில் தெருவில் புதுக்குடித்தனம் சென்ற உறவினா் வீட்டுக்குச் சென்றாா். ஒரு பொருளை எடுப்பதற்காக அந்த வீட்டின் கூரையில் ஏறினாா். அப்போது மேலே சென்ற மின்சார வயா் அவரது உடலில் பட்டது. இதில், மின்சாரம் பாய்ந்து மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT