குடியாத்தம்: குடியாத்தம் அருகே உடலில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.
கன்னிகாபுரத்தில் இருந்து ராஜாகுப்பம் செல்லும் சாலையில், கோவிந்தாபுரம் அருகே புதன்கிழமை நள்ளிரவில், 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக குடியாத்தம் கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த நபரின் உடலில் காயங்கள் உள்ளன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.