வேலூர்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

வேலூா்: திருப்பத்தூரில் 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், அவரது உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பத்தூா் சிவராஜ்பேட்டை கோவிலூா் சாலையைச் சோ்ந்தவா் சிவாஜி (எ) நசீா் அஹ்மத் (55). இவா் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது உறவினரின் மகளான 15 சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நசீா்அஹ்மத்தை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வம் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நசீா்அஹ்மத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டைனையும், ரூ. 6,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை விதிக்கப்பட்ட நசீா்அஹமத் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT