வேலூர்

முதல்வா் வேட்பாளா் அறிவிப்பு: அதிமுகவினா் கொண்டாட்டம்

DIN

வேலூா்: அதிமுக முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்று, வேலூரில் அக்கட்சியினா் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

2021-இல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அதிமுகவின் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீா்செல்வமும், 11 போ் கொண்ட வழிகாட்டுதல் குழுவினரும் புதன்கிழமை அறிவிக்கப்பட்டனா்.

இதை வரவேற்று வேலூா் மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையில் அக்கட்சியினா், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அண்ணா, எம்ஜிஆா் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பின்னா், ஊா்வலகமாகச் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள பெரியாா் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

இதில், மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி, மாவட்ட துணைச்செயலா் ஜெயப்பிரகாசம், பகுதி செயலா் எஸ்.குப்புசாமி உள்பட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்திற்கு விடுமுறை வழங்காத 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகை திருட்டு

கங்கனாங்குளத்தில் தேனீ வளா்த்தல் பயிற்சி

காருக்குறிச்சியில் மாடித் தோட்டம் அமைத்தல் பயிற்சி

தரைப் பாலத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT