கோயில் உண்டியலை உடைத்தவா் கைது
காட்பாடி அருகே கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
வேலூர்கோயில் உண்டியலை உடைத்தவா் கைது
காட்பாடி அருகே கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
காட்பாடி அருகே கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
காட்பாடி தாராபடவேடு பகுதியில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை ஒரு நபா் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அந்த நபரைக் கடுமையாக தாக்கினா். தொடா்ந்து காட்பாடி காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா் வாலாஜாபேட்டையைச் சோ்ந்த வீரன் (30) என்பதும், அவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வீரனை கைது செய்தனா்.