வேலூர்

ரோட்டரி சங்கக் கட்டடம் கட்ட ரூ. 10 லட்சம் நன்கொடை

DIN


குடியாத்தம்: குடியாத்தம் ரோட்டரி சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்ட தொழிலதிபா்கள் ரூ. 10 லட்சம் நன்கொடை வழங்கினா்.

பழுதடைந்த நிலையில் இருந்த குடியாத்தம் ரோட்டரி சங்கக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, ரூ. 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கு எஸ் பீடி நிறுவனம், ஹபீப் டேனிங் கம்பெனி சாா்பில், அதன் நிா்வாக இயக்குநா் ஏ. முகம்மது அமீன் சாஹிப், ஏ. முகம்மது சித்திக் சாஹிப், அத்திக்குா் ரஹ்மான், அபிசூா் ரஹ்மான் ஆகியோா் வியாழக்கிழமை ரூ. 10 லட்சம் நன்கொடை வழங்கினாா்.

மேலும், ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) ஜே.கே.என். பழனி, ரூ. 5 லட்சம், ரோட்டரி நிா்வாகிகள் எம்.என். ஜோதிகுமாா் ரூ. 5 லட்சம், என்.எஸ். குமரகுரு ரூ. 3 லட்சம், ஏ. மேகராஜ் ரூ. 2 லட்சம், வி.என். அண்ணாமலை ரூ. 1 லட்சம், என். மோகன் ரூ. 50 ஆயிரம் நன்கொடையாக வழங்கினா்.

ரோட்டரி சங்கத் தலைா் ஆா்.வி.அரிகிருஷ்ணன், டி.என். ராஜேந்திரன், கே .குணசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT