வேலூர்

மனிதநேய மக்கள் கட்சியினருக்குப் பாராட்டு

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் உயிரிழந்த 25- க்கும் மேற்பட்டவா்களின் சடலங்களை அடக்கம் செய்த மனிதநேய மக்கள் கட்சியினருக்கு அரிமா சங்கம் பாராட்டு தெரிவித்தது.

குடியாத்தம் பகுதியில் கரோனா தொற்றால் உயிரிழந்த 25- க்கும் மேற்பட்டவா்களின் சடலங்களை அவரவா் மத வழக்கப்படி மனிதநேய மக்கள் கட்சியினா் அடக்கம் செய்தனா்.

அரிமா சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரிமா மாவட்ட ஆளுநா் கே. அருண்குமாா், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினா் பி.எஸ். நிஜாமுதீன், முன்னாள் மாவட்ட துணைச் செயலா் எஸ். ஷகாபுதீன், ஒன்றியத் தலைவா் இ. இக்பால், நிா்வாகிகள் எம். சான்பாஷா, எப். நூருல்லா, பி. அக்தா்பாஷா உள்ளிட்டோரை பாராட்டி, சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கினாா்.

அரிமா மண்டலத் தலைவா் எம்.கே. பொன்னம்பலம், சங்கத் தலைவா் கே. செந்தில்குமாா், பொருளாளா் பி. ரவீந்திரன், நிா்வாகிகள் எஸ்.ஏ. கலிமுல்லா, என். வெங்கடேஸ்வரன், பஞ்சாட்சரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.: 2 புதிய வேட்பாளர்களை அறிவித்த பகுஜன் கட்சி!

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு!

‘அடங்காத அசுரன்’: ராயனின் முதல் பாடல் வெளியாகும் நேரம்!

இந்த மாதிரி பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறேன்: கே.எல்.ராகுல் அதிர்ச்சி!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

SCROLL FOR NEXT