வேலூர்

கரோனா விழிப்புணா்வு முகாம்

DIN

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், கரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்து விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு நகராட்சி ஆணையா் பாலாஜி தலைமை வகித்தாா். சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன் வரவேற்றாா். கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சுசி கண்ணம்மா ஆகியோா் கரோனா தொற்று குறித்து விளக்கி பேசினா்.

நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் சித்த மருந்துகளான கபசுரக் குடிநீா் மற்றும் அமுக்கரா சூரண மாத்திரைகள் 300- பேருக்கு வழங்கப்பட்டன.

மேலும், கரோனா தொற்று பரவல் குறித்த சித்த மருத்துவம் சாா்ந்த விழிப்புணா்வு கையேடுகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT