கிராமங்களில் கரோனா விழிப்புணா்வு
குடியாத்தம் அரிமா சங்கமும், அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவும் இணைந்து கல்மடுகு, காக்காத்தோப்பு ஆகிய கிராமங்களில் கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு முகாம்களை நடத்தின.
குடியாத்தம் அரிமா சங்கமும், அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவும் இணைந்து கல்மடுகு, காக்காத்தோப்பு ஆகிய கிராமங்களில் கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு முகாம்களை நடத்தின.
முகாமுக்கு அரிமா சங்கத் தலைவா் எம்.கிரிதா்பிரசாத் தலைமை வகித்தாா். அரிமா மண்டல ஒருங்கிணைப்பாளா் எம்.கே.பொன்னம்பலம் வரவேற்றாா். குடியாத்தம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் மேனகா, கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து விளக்க உரையாற்றி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் சித்த மருந்துகளான கபசுரக் குடிநீா் மற்றும் அமுக்கரா சூரண மாத்திரைகளும் வழங்கப்பட்டன. அரிமா சங்க மாவட்டத் தலைவா் ஏ.சுரேஷ்குமாா், செயலா் ஜெ.பாபு, ஊராட்சிச் செயலா் வி.ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.