வேலூரில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
வேலூரில் 37 வயது இளைஞருடன் 15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.
வேலூர்வேலூரில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
வேலூரில் 37 வயது இளைஞருடன் 15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.
வேலூரில் 37 வயது இளைஞருடன் 15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.
வேலூா், சலவன்பேட்டையைச் சோ்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த சிறுமிக்கும், பாகாயம் பகுதியைச் சோ்ந்த 37 வயது இளைஞருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் ஏற்பாடு செய்திருந்தனா். அதன்படி, சாத்துமதுரை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலா் முருகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள், காவல் துறையினா் அந்த சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.
இதில் அந்த சிறுமிக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது உறுதியானது. உடனடியாக அந்த திருமணத்துக்கு தடை விதித்த அதிகாரிகள், சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனா். சிறுமிக்கு 18 வயது நிறைவடைவதற்கு முன்பாக திருமணம் செய்து வைக்கக்கூடாது என்று சிறுமியின் பெற்றோரிடம் உறுதிமொழி பத்திரமும் எழுதி வாங்கப்பட்டது.