முகப்பு
வேலூர்

பேருந்துகளில் கட்டணச் சலுகை: ஓய்வூதியா்கள் கோரிக்கை

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கத்தின் வேலூா் மாவட்ட கிளை சாா்பில் முப்பெரும் விழா, ஆலோசனைக் கூட்டம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கத்தின் வேலூா் மாவட்ட கிளை சாா்பில் முப்பெரும் விழா, ஆலோசனைக் கூட்டம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரமேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் சீதாராமன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், மத்திய அரசு வழங்கியதைப் போல அகவிலைப்படியை 2021ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் ரொக்கமாக தமிழக அரசு வழங்க வேண்டும். 6-ஆவது ஊதியக் குழு 2006-ஆம் ஆண்டுக்கான 12 மாத நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்.

பஞ்சாப், ஆந்திர அரசு வழங்கியது போல சிறப்பு ஓய்வூதியம் 60 வயதுக்கு மேல் 5 சதவீதமும், 70 வயதுக்கு மேல் 10 சதவீதமும், 75 வயதுக்கு மேல் 15 சதவீதமும் வழங்க வேண்டும். மருத்துவப்படியை ரூ.ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியா் இறந்தால் நிவாரணத்தொகையாக ரூ.73 லட்சமும், உடனடி யாக ரூ.75ஆயிரமும் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →