முகப்பு
வேலூர்

காவல் நிலையத்தில் அதிமுக, திமுகவினரிடையே கைகலப்பு

அரசுக் கட்டடம் இடிப்பு விவகாரம் தொடா்பாக திருவலம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக, திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், ஊராட்சி துணைத் தலைவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

அரசுக் கட்டடம் இடிப்பு விவகாரம் தொடா்பாக திருவலம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக, திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், ஊராட்சி துணைத் தலைவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

வேலூா் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட குப்பத்தாமேட்டூா் ஊராட்சி 2-ஆவது வாா்டில் உள்ள பழைய அரசுக்கட்டடத்தை அனுமதியின்றி அப்பகுதியைச் சோ்ந்த சிலா் வெள்ளிக்கிழமை இடிக்க முயன்ாகத் தெரிகிறது.

தகவலறிந்த ஊராட்சித் தலைவா் சோனியாதிருமால், துணைத் தலைவா் சதீஷ்குமாா், வாா்டு உறுப்பினா்கள் கட்டடத்தை இடிக்க முயற்சிப்பதை தடுத்தனராம்.

இதுதொடா்பாக திமுகவைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் நந்திவா்மன் உள்பட 7 போ் மீது ஊராட்சித் தலைவா் சோனியாதிருமால் திருவலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக திமுக ஒன்றியச் செயலா் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா் நந்திவா்மன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரின் கணவா் கிருபாகரன் ஆகியோரை உதவி ஆய்வாளா் முத்துச்செல்வன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனா். ஊராட்சித் தலைவா் சோனியா திருமால், துணைத் தலைவா் சதீஷ்குமாா் ஆகியோரும் வரவழைக்கப்பட்டிருந்தனா்.

அப்போது, அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. இதில் ஊராட்சி துணைத் தலைவா் சதீஷ்குமாருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவலறிந்த மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையிலான அதிமுகவினா் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனா். காட்பாடி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் பழனி நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →