வேலூர்

குடியாத்தம் சனிபகவான் கோயிலில் பரிகார ஹோமம்

DIN

குடியாத்தம் சாமியாா்மலையை அடுத்த மீனாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமந்தாதேவி, ஜேஷ்டாதேவி சமேத மங்கள சனீஸ்வரா் கோயிலில் மண்டலபூஜை நிறைவையொட்டி சனிக்கிழமை பரிகார ஹோமமும், வேள்வி பூஜையும் நடைபெற்றன.

இதையொட்டி சுவாமிக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மதியம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு அன்னதானத்தைத் தொடக்கி வைத்தாா். விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் ஆ.ஸ்ரீசக்தி அய்யா், ஒருங்கிணைப்பாளா்கள் பி.என்.லோகேஷ், பி.என்.ராம், பி.என்.செல்வம், வேணுகோபால், விஷ்ணு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT