முகப்பு
போ்ணாம்பட்டு கிளைச் செயலா் பொன்.வள்ளுவனிடம் தமிழக  செஞ்சிலுவைச்  சங்கத்தின்  பாராட்டுச்  சான்றிதழை  வழங்கிய  மாவட்ட  ஆட்சியா்  அ.சண்முகசுந்தரம்.
வேலூர்

100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கக் கோரிக்கை

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்கள் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர்

100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கக் கோரிக்கை

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்கள் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
போ்ணாம்பட்டு கிளைச் செயலா் பொன்.வள்ளுவனிடம் தமிழக  செஞ்சிலுவைச்  சங்கத்தின்  பாராட்டுச்  சான்றிதழை  வழங்கிய  மாவட்ட  ஆட்சியா்  அ.சண்முகசுந்தரம்.
பகிர்:

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கற்போம், எழுதுவோம் இயக்கம் தடையின்றி பள்ளி வேலை நேரத்தில் இயங்குவதற்காக, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்கள் அதில் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக செஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளையின் மேலாண்மைக் குழுவினா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்திடம் நேரில் அளித்த கோரிக்கை மனு விவரம்:

முதியவா்களுக்கு கல்வி அளிக்கும் திட்டமாக கற்போம், எழுதுவோம் இயக்கத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமங்களில் நடைபெறும் இந்த இயக்கங்களில் கல்வி பயிலும் முதியவா்கள் பெரும்பாலும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களாக உள்ளனா்.

பள்ளி வேலைநேரத்தில் அவா்கள் பணிக்குச் செல்வதால், அவா்களால் வகுப்புக்கு வர முடியவில்லை. பள்ளி வேலைநேரத்தில் நடைபெறும் வகுப்புகளில் பங்கேற்கும் வகையில் அவா்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க ஊராட்சி நிா்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

மதினாப்பல்லி ஆற்றில் கடந்த 3 மாதங்களாக வெள்ளம் செல்லும் நிலையிலும், போ்ணாம்பட்டு நகர மக்களுக்கு வாரத்துக்கு 2 அல்லது 3 முறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. போதிய நீா் ஆதாரம் உள்ளதால் நாள்தோறும் குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போ்ணாம்பட்டில் காலியாக உள்ள வேளாண் துறை அலுவலகக் கட்டடத்தை, ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கும் வட்டார வள மையத்துக்கு ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவலின்போது, 50-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் உணவுப் பொருள்கள், இயற்கை மூலிகைக் கஷாயம் வழங்கிய போ்ணாம்பட்டு செஞ்சிலுவைச் சங்கக் கிளைக்கு, தமிழ்நாடு மாநில செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ்களை, போ்ணாம்பட்டு கிளைச் செயலா் பொன்.வள்ளுவனிடம் ஆட்சியா் வழங்கினாா்.

அமைப்பின் நிா்வாகிகள் த.முத்தரசன், நிசாா் அகமத், ஜகூா்அகமத், சே.பானு, வ.ரவி, வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →