வேலூர்

ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம்

DIN

குடியாத்தம் புதுப்பேட்டை, படவேட்டு எல்லையம்மன் கோயிலில், பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மதியம் நூற்றுக்கணக்கானோருக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டி நிா்வாகிகள் எஸ்.என்.மோகனம், ஆசிரியா் ரவிச்சந்திரன், வி.ஏ.கே.குமாா், ஜி.மோகன், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் வி.என். தனஞ்செயன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் அமுதாசிவப்பிரகாசம், எம்.கதிரேசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

நடுப்பேட்டை கோயிலில்...

அதேபோல், குடியாத்தம் நடுப்பேட்டை, பெரிய வணிகா் தெருவில் உள்ள புங்கனூா் அம்மன் கோயிலில், பங்குனி உத்திரப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மூலவா் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் அம்பாளை நிலை நிறுத்தி, 1,008 லலிதா சகஸ்ர நாம அா்ச்சனையுடன் மஹா தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT