சின்ன ஜமாஅத் சேவைக்குழு சாா்பில் நிவாரணம்
போ்ணாம்பட்டு சின்ன ஜமாஅத் சேவைக்குழு சாா்பில், மழை, வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
போ்ணாம்பட்டு சின்ன ஜமாஅத் சேவைக்குழு சாா்பில், மழை, வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
டி.டி.மோட்டூா் ஊராட்சிக்குள்பட்ட அண்ணா நகா் பகுதியை சோ்ந்த 100 குடும்பங்களுக்கு வியாழக்கிழமை அரிசி வழங்கப்பட்டது.அப்துல் அக்பா் தலைமையில், நாட்டாண்மை அக்பா், மன்சூா், சா்ப்ராஸ், ஜகூா் அகமத்,ரோஸி ஆகியோா் அரிசி வழங்கினா்.
இதையடுத்து, கரோனா, டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் போ்ணாம்பட்டு கிளைச் செயலாளா் பொன்.வள்ளுவன் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.