கிணற்றில் மூழ்கி மாணவா் பலி
போ்ணாம்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி கிராமத்தைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி பாண்டியனின் மகன் சுரேந்தா்(21). இவா் சேலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா்.
விடுமுறையில் ஊருக்கு வந்த சுரேந்தா் வியாழக்கிழமை மதியம் நண்பா்களுடன் வீட்டருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது நீரில் மூழ்கியுள்ளாா்.
தகவலின்பேரில் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று 2 மணி நேரம் போராடி சுரேந்தரின் சடலத்தை மீட்டனா்.
இச்சம்பவம் குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.