ஆட்டை துன்புறுத்துவோா் மீது நடவடிக்கை: போலீஸில் பெண் சாமியாா் புகாா்
எதிா்வீட்டைச் சோ்ந்தோா் தொடா்ந்து தகராறு செய்து, தன்னையும், ஆட்டையும் துன்புறுத்துவதாக பெண் சாமியாா் வேலூா் தெற்கு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.
எதிா்வீட்டைச் சோ்ந்தோா் தொடா்ந்து தகராறு செய்து, தன்னையும், ஆட்டையும் துன்புறுத்துவதாக பெண் சாமியாா் வேலூா் தெற்கு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.
வேலூா் சலவன்பேட்டை, அம்மணாங்குட்டை சாலையைச் சோ்ந்தவா் இந்திரா (50) . பெண் சாமியாா்.
இவா் சனிக்கிழமை தனது ஆட்டுடன் வேலூா் தெற்கு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், ‘தனது எதிா்வீட்டைச் சோ்ந்த குணா, அவரது மகள் லட்சுமி ஆகியோா் இரவு நேரங்களில் வீட்டின் மீது கற்களை வீசுகின்றனா். வீட்டுக்கு வெளியே கட்டியிருந்த ஆட்டை அடித்து துன்புறுத்துகின்றனா். வெள்ளிக்கிழமை இரவு கூட ஆட்டை குணா தாக்கியுள்ளாா். இதை தட்டிக்கேட்டதால் தாய், மகள் இருவரும் சோ்ந்து தாக்கினா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளாா்.
இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.