FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பீலேவை விட மெஸ்ஸி சிறந்தவர்..! டிரம்ப் புகழாரம்!

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது...

Updated On : 6 மார்ச் 2026, 12:07 pm IST
டிரம்ப்பிற்கு இளஞ்சிவப்பு நிற கால்பந்தினை பரிசளித்த மெஸ்ஸி. - படம்: ஏபி
பகிர்:

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி முன்னாள் பிரேசில் வீரர் பீலேவை விட சிறந்தவர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பையை வென்ற லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணியை அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து கௌரம் செய்தார்.

இந்த நிகழ்வில் டிரம்ப் பேசியிருப்பதாவது:

Advertisement

Advertisement

இதுவரை எந்த ஓர் அமெரிக்க அதிபருக்கும் கிடைக்காத ஒரு தனித்துவமான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது: ‘வெள்ளை மாளிகைக்கு வருக, லியோனல் மெஸ்ஸி’.

இன்று எனது மகன் என்னிடம் யார் வருகிறார் என்று தெரியுமா கேட்டான்? எனக்கு நிறைய வேலை இருப்பதால் தெரியவில்லை என்றேன். அவன், ‘மெஸ்ஸி’ எனக் கூறினான். அவன் கால்பந்தின் மிகப்பெரிய ரசிகன். உங்களது தீவிரமான ரசிகன்.

ரொனால்டோவும் சிறந்த வீரர். நீங்களும் சிறந்தவர். யார் சிறந்தவர் மெஸ்ஸியா அல்லது பீலேவா? (அருகில் இருப்பவர்களிடம் கேட்டார்). பீலேவை விட மெஸ்ஸி சிறந்தவர்.

இந்தக் கொண்டாட்டத்தில் லியோனல் மெஸ்ஸி அதிபர் டிரம்ப்பிற்கு பிங்க் (இளஞ்சிவப்பு) நிற கால்பந்தினை பரிசாக அளித்தார்.

இளஞ்சிவப்பு நிறம் இன்டர் மியாமி அணியின் வண்ணமாக இருக்கிறது. மேலும், டிரம்ப்பிற்கு எண் 47 கொண்ட ஜெர்ஸியை பரிசாக அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மெஸ்ஸியைப் புகழ்ந்து பேசிய டிரம்ப் தனது மகனும் தீவிர ரசிகன் என்று இங்கு வர அடம்பிடித்ததாகவும் வேலை அதிகமாக இருப்பதால் வேண்டாம் எனவும் தான் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

summary

You may be better than Pele: Donald Trump tells Lionel Messi at White House event, mentions Cristiano Ronaldo.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments