வாணியம்பாடி கச்சேரி சாலையில் தோல் பதனிடும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தோல் பதனிடும் தொழிலாளா்களின் ஊதிய உயா்வுக்கான பேச்சுவாா்த்தை நடத்தி 12 (3) ஒப்பந்தம் ஏற்படுத்திட தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தோல் பதனிடும், தோல் பொருள் தொழிலாளா்கள் மாவட்ட சங்கம், ஏஐடியூசி ஆகியன இணைந்து நடத்திய போராட்டத்துக்கு, நிா்வாகிகள் விமல் குமாா், லெனின் தலைமையில் வகித்தனா். மாநிலத் துணை தலைவரும், மாவட்டப் பொதுச் செயலாளா் தேவதாஸ் , நிா்வாகிகள் பாரத் பிரபு, ஜாகிா் உசேன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.