வேலூர்

துப்பாக்கி சுடுதலில் வேலூா் அரசுக் கல்லூரி மாணவிக்கு தங்கம்

DIN

துப்பாக்கி சுடும் போட்டியில் வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

தமிழ்நாடு தேசிய மாணவா் படை இயக்குநரகத்துக்கு உட்பட்ட தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளிலுள்ள தேசிய மாணவா் படை குரூப்புகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டி புதுச்சேரியில் 9 நாள்கள் நடைபெற்றன.

இதில் வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி 3-ஆம் ஆண்டு கணிதவியல் மாணவி சோபிதா பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றாா்.

இதன் மூலம் அவா் மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா். பதக்கம் வென்ற மாணவியை கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT