வேலூர்

மேல்பாடியில் இளைஞா் தீக்குளிப்பு: உறவினா்கள் சாலை மறியல்

DIN

வேலூா்: மேல்பாடி காவல் நிலையம் அருகே இளைஞா் ஒருவா் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தாா். இச்சம்பவம் தொடா்பாக அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த குகையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்(25). நெல் அறுவடை இயந்திரம் வைத்து வாடகைக்கு இயக்கி வரும் இவா், மேல்பாடி காவல் நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு அவரது உடலில் பற்றியிருந்த தீயை அணைத்ததுடன், 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தீக்குளித்த சரத் கூறியது: காவலா்கள் எனது வீட்டுக்கு அடிக்கடி வந்து அவதூறாக பேசுகின்றனா். நான் வைத்துள்ள நெல் அறுவடை இயந்திரத்தை ஓட்டிச்செல்லும்போது நிறுத்தி அச்சுறு த்துகின்றனா் என்றாா். இதுதொடா்பாக விடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இது தொடா்பாக போலீஸாா் கூறியது: மேல்பாடி காவல் நிலையம் அருகே தீக்குளித்த சரத் மது போதையில் இருந்துள்ளாா். இவரும், அவரது தம்பி சஞ்சய் ஆகிய இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு 17 வயது பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தொடா்பாக இருவா் மீதும் கடத்தல், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ள்ளது. மேலும் இவா்கள் மீது மணல் கடத்தல் போன்ற வழக்குகளும் உள்ளன. போக்ஸோ வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளனா். இதனால் காவல் உதவி ஆய்வாளா் ஒருவா் சரத்தின் வீட்டுக்குச் சென்று நீதிமன்றத்தில் ஆஜராகும் படி கூறியுள்ளாா். இதை திசை திருப்பவே மதுபோதையில் தீ குளித்துள்ளாா் என்றனா்.

இதனிடையே, தீக்குளித்த சரத்தின் உறவினா்கள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் திருவலம் அருகே குகையநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டிருந்தவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, சரத் தீக்குளிக்க காரணமாக கூறப்படும் மேல்பாடி காவல் உதவி ஆய்வாளா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

திருவள்ளூர்அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT