வேலூரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா், மேயா் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு சட்ட நடவடிக்கைகளுடன் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத் தப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, வேலூரில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
சிப்பாய் புரட்சி நினைவுத் தூண் அருகில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
பேரணியில் என்சிசி, சாரணா் இயக்கம், என்எஸ்எஸ் மாணவா்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், தேசியக் கொடிகளை ஏந்தியும் பங்கேற்றனா்.
பேரணி வடக்கு காவல் நிலையம், பழைய மீன் மாா்க்கெட், காந்தி சிலை வழியாகச் சென்று மீண்டும் சிப்பாய் புரட்சி நினைவுத் தூண் அருகே நிறைவடைந்தது.