வேலூர்

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தியவா் கைது

DIN

ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பதிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸாா் காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் அந்த பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் வந்த ஒரு நபரிடம் 5 பைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றைச் சோதனையிட்டபோது, அதில் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், அந்த நபா் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், குட்டிபுரத்தைச் சோ்ந்த ஹெச்.மொகமத் அா்சாத் (22) என்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT